திருச்சி முக்கொம்பு வாத்தலை புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு - அமைச்சர், எம்எல்ஏக்கள், விவசாயிகள் பங்கேற்றனர்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே காவிரி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் பாசத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.
திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றின் இடது கரையில் உள்ள வாத்தலை பகுதியில் அமைந்துள்ள புள்ளம்பாடி தலைப்பு வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்கால் மண்ணச்சநல்லூர் வழியாக சமயபுரம் , பெருவளநல்லூர், புள்ளம்பாடி, கோவண்டாகுறிச்சி, ஆலம்பாக்கம், அரியலூர் மாவட்டம், பளிங்காநத்தம், ஏலாக்குறிச்சி பகுதியில் உள்ள ஏரிகளில் இந்த நீர் கலக்கிறது. இந்த பாசன வாயக்காலின் மொத்த நீளம் 90.20 கிலோ மீட்டர் தொலைவு ஆகும்.
அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
எனவே ஆற்றரங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சீ.கதிரவன் (மண்ணச்சநல்லூர்) ( முசிறி ), அ. சௌந்தரபாண்டியன் ( லால்குடி ) ஸ்டாலின்குமார் ( துறையூர்) ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் ராஜா, ஏரி மற்றும் ஆறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments