BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் நாளை கருடா ஸ்கேன் மையம் திறப்பு விழா

திருச்சியில் நாளை கருடா ஸ்கேன் மையம் திறப்பு விழா

 திருச்சி புத்தூர் சிந்தாமணி எதிரில் உள்ள சந்தானம் டவரில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அதிநவீன கருடா ஸ்கேன் திறப்பு விழா நாளை (10-ந்தேதி, புதன்கிழமை) நடைபெறுகிறது. இங்கு அனைத்து நவீன ஸ்கேன் வசதிகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ, கலர் டாப்ளர் அனைத்தும் ஒரே இடத்தில் நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு திறக்கப்பட உள்ளது.


இந்த மையத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனை 20 நிமிடத்தில் எடுத்துவிடலாம். சப்தம் குறைவாக இருக்கும், 24 மணி நேரமும் இயங்கும். அவசர ஊர்தி வசதியும் இங்கு உள்ளது. உடனுக்குடன் அறிக்கை தர மருத்துவர் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். படங்கள் துல்லியமாக, தெள்ளத்தெளிவாக இருக்கும். இங்குள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் நரம்பியல் சம்பந்தமான புதிய தொழில்நுட்பம் உள்ளதால் அனைத்து வியாதிகளையும் கண்டறிய முடியும்.


உதாரணமாக ஒருவருக்கு மூளையில் கட்டி இருந்தால் அவரை கை, கால்களை ஆட்டச் சொல்லியும், பேச வைத்தும் ஸ்கேன் எடுக்கலாம். இதனால் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது பாதுகாப்பான சிகிச்சை அளிக்க முடியும். மூளையின் எந்த பகுதியில் ரத்த அடைப்போ, கசிவோ ஏற்பட்டால் 15 நிமிடத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் விரைவாக குணமடைய வேண்டும்.


தலைக்காயம் ஏற்பட்டு மூளையில் திரவ கசிவு ஏற்பட்டால் அதை துல்லியமாக கண்டறிவதன் மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வெற்றிகரமாக செயல்பட முடியும். மூளை பகுதியில் டி.பி. நோய் ஏற்பட்டால் அதற்கு ஸ்பெக்ட்ரோகோப்பி முறையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து எளிதாக கண்டறியலாம் என்ற நவீன பயன்பாடுகள் உள்ளன.


நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் தண்டுவட நோய்கள், உடலின் எந்த பகுதியில் சதை பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், முட்டி பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், வயிற்றில் கணையம், கல்லீரல், பித்தப்பை, பித்தக்குழாய் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக அறியலாம். பெண்களுக்கு மார்பக கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகள் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.


அனைவரும் ஒரே குழுவாக செயல்பட்டு நோயாளிகளை அக்கறையுடன் கவனித்து பரிசோதனைகள் செய்து அவர்களுக்கான மருத்துவ அறிக்கை உடனே செல்லுமாறு பார்த்துக்கொள்வார்கள். மற்ற மருத்துவமனைகளில் இருப்பவர்களை அழைத்து வர இலவச அவசர ஊர்தி வசதிகள் 24 மணி நேரமும் உள்ளது.


கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு முந்தைய ஸ்கேன் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் தனியாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பதிவு கட்டாயம் அவசியமாகும். தேவைப்படுவர்களுக்கு சலுகை கட்டணத்திலும் ஸ்கேன் வசதி செய்து தரப்பட உள்ளது.


கருடா ஸ்கேன் திறப்பு விழாவை அதன் குடும்ப பெரியவர்கள் நாளை காலை 11 மணிக்கு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்க உள்ளனர். இதில் சக மருத்துவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கருடா ஸ்கேன் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments