BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டில் கொடியேற்று விழா

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டில் கொடியேற்று விழா

 எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டு ஜின்னா திடலில் கொடியேற்று விழா வார்டு ஒருங்கிணைப்பாளர் சபியுல்லா அவர்களின் தலைமையில் நேற்று  நடைபெற்றது.கிழக்கு தொகுதி தலைவர் தர்கா.முஸ்தபா மற்றும் திருவெறும்பூர் தொகுதி செயலாளர் கைருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.


எஸ்டிபிஐ கட்சியின் கொடியை திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி அவர்கள் ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.


இக்கொடியேற்று நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மண்டல தலைவர் இமாம் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி.,அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த நிகழ்வினை கிழக்கு தொகுதி செயலாளர் வரகனேரி காதர்(பாபு) அவர்கள் தொகுத்து வழங்கி நன்றியுரை ஆற்றினார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள்,தொகுதி அணி,கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


Post a Comment

0 Comments