திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலை பகுதியில் சாலையை பறித்துவிட்டு போடாமல் விட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் வாகன ஓட்டிகளும் சம்பந்தப்பட்ட திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் மதுக்கான் நிறுவனம் உள்ளிட்ட பலரிடம் தெரிவித்தும் அவர்கள் தாங்கள் பறிக்கவில்லை என்றும் இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி மழுப்பி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் நாள்தோறும் அப்பாவி பொதுமக்கள் அந்த சாலையில் வாகனங்களை இயக்கும்போது கீழே விழுந்து காயம் அடைவதுடன் வாகனங்களும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை இருந்து கல்லணை சாலைக்கு பிரிந்து செல்லும் பகுதியில் பறிக்கப்பட்டுள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments