// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தமிழ் புலிகள் கட்சி ஆதரவு

பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தமிழ் புலிகள் கட்சி ஆதரவு

திருச்சியில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்....


சமூக நீதி உள்ளிட்ட மாநில உரிமைகளை பாதுகாத்திடவும், சனாதன சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாத்திடவும் திராவிட மாடல் ஆட்சி தொடர எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். 



மேலும் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்துகின்ற குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த மனித தன்மையற்ற சாதிவெறி செயலை கண்டித்து வரும் ஜனவரி 9 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments