BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** குத்பிஷா நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணி தொடங்க மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது கோரிக்கை

குத்பிஷா நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணி தொடங்க மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது கோரிக்கை

 திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அவசர கூட்டம் இன்று காலை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் கலந்து கொண்டனர்.. இந்த கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும்  திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கோட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்... இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது வார்டு  பகுதிகளில் உள்ள பிரச்சனை எடுத்துரைத்தனர். இதில் குறிப்பாக 28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது பல்வேறு பிரச்சனைகளை மாநகராட்சி மேயரிடம் எடுத்துரைத்தார்.. 


தென்னூர் குத்பிஷா நகர்  பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைவாக தொடங்க கமிட்டி அமைத்து பொதுமக்களிடம் கருத்தை கேட்டு விரைவாக பணி தொடங்க கோரிக்கை வைத்தார்...


திருச்சி அண்ணாநகர் குழுமிக்கரை பகுதியில் சுடுகாட்டில் மின் மயான தகன மேடை அமைக்க கோரிக்கை வைத்தார்..


குழுமிக்கரை குப்பை கிடங்கில் பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பகுதியை சுற்று சுவர் எழுப்பி மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்...

திருச்சி தென்னூர் ஹைரோடு அரசமரம் பேருந்து நிறுத்தம் மற்றும் சுப்பையா மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பகுதி சாலையில் அதிக விபத்து ஏற்படுவதால் அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர  28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது கோரிக்கை வைத்தார்

Post a Comment

0 Comments