// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி சமயபுரம் பூச்சொரிதல் விழாவையொட்டி தென்னூர் பாரதி நகரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி சமயபுரம் பூச்சொரிதல் விழாவையொட்டி தென்னூர் பாரதி நகரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவின் 5 வது வாரத்தை முன்னிட்டு திருச்சி தென்னூர் பாரதி நகர் பகுதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 




பாரதி நகர் இளைஞர்கள் மற்றும் தெரு வாசிகள் சார்பில் இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் துணை மேயருமான  சீனிவாசன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.  










இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் முஸ்தபா, அன்பழகன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ராஜேந்திரன், வட்ட செயலாளர் வெல்லமண்டி கன்னியப்பன்,  தொழிலதிபர் பொறியாளர் இப்ராஹிம்ஷா உள்பட அப்பகுதி இளைஞர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments