BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி பன்னாட்டு புதிய விமான நிலையம் விரிவாக்கம் விவசாய நிலங்களை வையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு - விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி பன்னாட்டு புதிய விமான நிலையம் விரிவாக்கம் விவசாய நிலங்களை வையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு - விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி மாவட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்காக கீழக்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலங்களை  கையகம் செய்யப்படுவதை எதிர்த்து  நில உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.



இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த 21  பேர் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமியிடம் நேரில் சந்தித்து இது தொடர்பான விசாரணை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  



அதன்படி இடத்திற்கு சொந்தமான 21 பேர் இன்று 3 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தும் இதுவரை யாரும் எங்களை சந்திக்கவில்லை எனவும் தற்பொழுது வரை எங்களை காக்க வைக்கின்றனர் எனக் கூறி இடத்தின் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments