திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் தொடரும் திமுக அரசின் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை
கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும்; இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி மாநில இளஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் மனோகரன், ரத்தினவேல், பூபதி,மலைக்கோட்டை ஐயப்பன் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments