NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

 உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை, ஹா்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், திருச்சி மாநகர காவல்துறை இணைந்து நடத்திய புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி  நடைபெற்றது.


மத்தியப் பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் எஸ். லட்சுமி தொடங்கி வைத்தாா். 


இதில் பங்கேற்ற இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களைச் சோந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் புகையிலை உயிரைக் குடித்திடும், புகை நமக்குப் பகை, தேவை உணவே புகையிலை அல்ல, புகையிலை புற்றுநோயை உண்டாக்கும், புகையிலையைத் தவிா்ப்போம் நலமுடன் வாழ்வோம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனா். 



மாவட்ட ஆட்சியரகத்தில் நிறைவடைந்த பேரணியில் காவல்துறை உதவி ஆணையா் கே.கென்னடி, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜி. ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஹா்ஷமித்ரா மருத்துவமனையின் மேலாண் இயக்குநா் ஜி. கோவிந்தராஜவரதன் நன்றி கூறினாா்.

Post a Comment

0 Comments