BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி - இவரது கணவர் செல்வகுமார்.



அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்துள்ளார் - இதே போல் சமூக ஆர்வலர் என்ற பெயரில் தெரிந்து வரும் பெட்டிசன் காமராஜ் என்பவரிடம் 5.75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார்.


இந்நிலையில் இவர்கள் இருவர் மீதும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமலா சாந்தி மன்னனை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார் - உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடியிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்

Post a Comment

0 Comments