// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** பொருளாதாரத் துறை மாணவர்களுக்கான பெற்றோர் - ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

பொருளாதாரத் துறை மாணவர்களுக்கான பெற்றோர் - ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

 திருச்சி தேசிய கல்லூரியில் பொருளாதார துறை சார்பாக இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி இலக்கியா வரவேற்புரை வழங்கினார்.


கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் தலைமை வகித்தார். பொருளாதார துறை தலைவர் & தேர்வு நெறியாளர் முனைவர் து. ஸ்ரீதர் பெற்றோர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். 



இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் பொருளாதார துறை பேராசிரியர்கள் கலந்துரையாடி கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் சிவசக்தி நன்றி கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியினை வகுப்பாசிரியர் முனைவர் R.கீதா ஒருங்கிணைத்தார்.


நிருபர் ரூபன் 


Post a Comment

0 Comments