திருச்சியில் குடியிருந்த வீடுகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் பேட்டி
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் நெடுஞ்செழியன் தெரு பகுதியில் பிரான்சிஸ் டேவிட் என்பவருக்கு சொந்தமாக 6 வீடுகள் உள்ளது. இந்த வீடுகளை 3,50,000/- மற்றும் 400000/- என ஆறு குடும்பத்தாருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஒத்திகை பத்திரம் மூலம் ஒத்திகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் பிரான்சிஸ் டேவிட் தனது வீட்டின் மீது தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை மாத மாதம் செலுத்தி வந்தார் இந்நிலையில் சில மாதங்களாக தனியார் வங்கிக்கு பணம் செலுத்தாததால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்வதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வீட்டின் உரிமையாளர் பிரான்சிஸ் டேவிட் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை திடீரென தனியார் வங்கியை சேர்ந்த அதிகாரிகள் போலீசாருடன் வந்து ஒத்திகை வீட்டில் இருந்த குடும்பத்தாரிடம் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வீட்டில் இருந்த பெண்களை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி ஆறு வீடுகளில் மூன்று வீடுகளுக்கு மட்டும் சீல் வைத்துவிட்டு சென்று விட்டனர். மேலும் உள்ள மூன்று வீடுகளுக்கு வருகிற செவ்வாய்க்கிழமை வரை காலக்கெடு விதித்தனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒத்திகையில் இருந்த குடும்பத்தினர் போலீஸ் கமிஷனர் காமினிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பேட்டியளிக்கையில்:- திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் நெடுஞ்செழியன் தெரு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 3,50,000/- மற்றும் 400000/- என வீட்டின் உரிமையாளர் பிரான்சிஸ் டேவிட்டிடம் பணம் கொடுத்து ஒத்திகைக்கு வந்தோம் ஆனால் எங்கள் பணத்தை திருப்பி தராமல் வீட்டின் உரிமையாளர் தலைமறைவு ஆகிவிட்டார் திடீரென தனியார் வங்கி அதிகாரிகள் எங்களை வீட்டை விட்டு வெளியே தள்ளி வீட்டிற்கு சீல் வைத்தது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் மேலும் பெண்கள் குழந்தைகள் முதியவர் என அனைவரும் தங்குவதற்கு வழி இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறோம் காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலையிட்டு வீட்டு உரிமையாளரிடமிருந்து எங்கள் ஒத்திகை பணத்தை மீட்டு தர வேண்டும் மேலும் நேற்றிலிருந்து இன்று வரை வீட்டிற்கு சீல் வைத்ததால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் எங்கள் பிள்ளைகளின் புத்தகம் உள்ளிட்டவை அப்படியே வீட்டில் உள்ளது உடனடியாக வீட்டைத் திறந்து காலக்கெடு வழங்க வேண்டும் இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து சாவதை தவிர வேறு வழி இல்லை எங்கள் சாவிற்கு இந்த அரசுதான் காரணம் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
0 Comments