தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பெயரை சூட்ட வேண்டும் என இடிமுரசு இஸ்மாயில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..
அந்த அறிக்கையில் கூறியதாவது....
தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டின் உயர்வுக்கும் பாடுபட்டு விழித்திருக்கும் நேரம் எல்லாம் வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டு நாடு போற்றும் நல்லாட்சியை புகழ் மிக்க பொற்கால ஆட்சியை வழங்கி வரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எந்த நாட்டிலும் இல்லாத அற்புதமான காலை உணவு திட்டத்தை அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தியதன் மூலம் மாணவர்கள் கல்வி கற்றிட தூண்டுகோலாக செயல்பட்டுள்ளார்..
இந்த நிலையில் கடந்த வாரம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவு படுத்திய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் பாராட்டை தெரிவித்துக் கொண்டார்..
தமிழ்நாட்டில் உள்ள 34 ஆயிரத்து 987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் காலை பசி,கடும் பசி என்ற பசிப்பினியை போக்கி கல்வி வளர்ச்சியில் இந்திய நாட்டிற்கே முன் உதாரணமாக செயல்படும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரின் பெயரை காலை உணவு திட்டத்திற்கு சூட்ட வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை ஏற்று முதல்வரின் பெயரை சூட்ட வேண்டும் என முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்
0 Comments