BREAKING NEWS *** திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணையை தற்காலிகமாக நிறுத்திய ஆந்திர சிறப்பு விசாரணைக் குழு *** புதிய 3 குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்த கூடாது என வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் பேரணி

புதிய 3 குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்த கூடாது என வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் பேரணி

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு மூன்று குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. 


பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் என்கிற பெயரிடப்பட்ட அந்த சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது


அந்த சட்டங்கள் தடா, பொடா ,உஃபா சட்டங்களின் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது, மக்களாட்சி மாண்பையும், மனித உரிமைகளையும் பறிக்கும் விதமாக உள்ளது, நீதித்துறையின் அதிகாரங்களை பறிக்கும் விதமாகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் உள்ளது.


எனவே இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பிலும் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது. 


அந்த பேரணியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் பேரணிக்கு திருச்சி எம்பி துரை வைகோ நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.


இந்தப் போராட்டத்திற்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மதியழகன், செயலாளர் சுகுமார். இணைச் செயலாளர்கள் அப்துல் சலாம், சந்தோஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜாக் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். ஜாக் சேர்மன் நந்தகுமார் சிறப்புரையாற்றினார். முடிவில் ஜாக் பொருளாளர் நன்றி கூறினார் .


இந்த போராட்டத்தில் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார், செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் சுதர்சன், முத்துமாரி, செந்தில். வினிஷ், ராஜலட்சுமி ,சாந்தி, கங்காதரன், மூத்த வழக்கறிஞர்கள் மார்ட்டின், கணேசன். கனகசபை, முத்துகிருஷ்ணன், விக்டர் வீராசாமி, மதானி, வீரமணி, மகேந்திரன், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், பொருளாளர் கிஷோர்குமார், 


துணை செயலாளர் சசிகுமார், துணைத்தலைவர் பிரபு, செயற்குழு உறுப்பினர் வக்கீல் பொன் முருகேசன், வழக்கறிஞர்கள் சரவணன், சிக்கல் சண்முகம், வெங்கடேசன், ஜெயராமன், வடிவேல் சாமி, மணிவண்ண பாரதி,அண்ணாதுரை, மகேஸ்வரி வையாபுரி,பெண் வழக்கறிஞர்கள் சங்கதலைவர் ஜெயந்தி, உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வக்கீல்கள் திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் 39 மாவட்டங்களில் இருந்து திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments