சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவிய கண்காட்சி!திருச்சியில் ஆகஸ்ட் 24, 25,26 தேதிகளில் நடைபெறுகிறது.திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக் கண்காட்சி திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்யா குளிர் அரங்கில் மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் தலைப்பில் நடக்கும் 3 நாட்கள் ஓவிய கண்காட்சியில் 33 இளம் ஓவியர்கள் பங்கேற்பில் 133 ஓவியங்கள் இடம்பெறுகின்றன.
ஒவிய கண்காட்சியில் மேனாள் நீதி அரசர் கே. சந்துரு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.திருச்சிராப்பள்ளி மாவட்ட மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி எம்.மகாலட்சுமி கண்காட்சியினை திறந்து வைக்கின்றார்.ஓவியர் என் எஸ். மனோகர் ஒவியங்கள் குறித்து சிறப்புரையாற்றுகிறார்.ஒவிய கண்காட்சியில் பங்கேற்ற இளம் ஓவியர்களுக்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பாராட்டு சான்றிதழும் பரிசுகளும் வழங்குகிறார்.
கவிஞர் நந்தலாலா,சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மதிவதனி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவிய கண்காட்சியில் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை தூரிகை ஓவியத்தில் உயர் பண மதிப்பிழப்பு சட்டம், போக்சோ சட்டம், வன உயிர் பாதுகாப்பு சட்டம், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், கல்வி உரிமைச் சட்டம். கையால் துப்புரவு பணி செய்பவர்கள் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுவது தடைச் சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு நலன் சட்டம் என பல்வேறு தலைப்புகளில் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
ஒவிய கண்காட்சிக்கான ஏற்பாட்டினை பள்ளி தாளாளர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம் செய்துள்ளனர்
0 Comments