திரைப்பட பின்னணி பாடகர் "கார்த்திக் லைவ் இன் திருச்சி" இசைக் கச்சேரி திருச்சி விமான நிலையம் அருகே மொராய்ஸ் சிட்டியில் நடைபெறுவது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது:-
திருச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் கார்த்திக் அவர்களின் நேரலை இசை கச்சேரி நடைபெறுவது குறித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் இன்புளுராசன்ஸ் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி தஞ்சை சாலையில் உள்ள டி எம் ஆர் ரெசிடென்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் கார்த்திக் லைவ் இன் திருச்சி ஈவன்ட் நிர்வாகி ராஜன் ராஜ்மோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரபல பின்னணிப் திரைப்பட பாடகரான கார்த்திக் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , ஒடியா , பெங்காலி , மராத்தி மற்றும் இந்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 8000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக பாய்ஸ் திரைப் படத்தில் அவர் பாடிய "எனக்கொரு கெர்ல்பிரண்ட் வேணுமடா" என்ற பாடலும் கஜினியில் "ஒரு மாலை" பாடலும் அதேபோல் வாரணம் ஆயிரம் படத்தில் அவர் கானா வகையில் பாடிய "அவ என்ன" என்ற பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றதன் மூலம் ரசிகர் மனதில் நீங்கா இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் கார்த்திக் நேரடி இசையின் மாயாஜாலத்தால் இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவாக அமைய போகிறது என தெரிவித்தார். இந்த இசை நிகழ்ச்சியில் திருச்சி மக்கள் மற்றும் பின்னணி பாடகர் கார்த்திக்கின் ரசிகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கார்த்திக் லைப் இன் திருச்சி இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் தற்போது விற்பனையாகி வருகிறது என தெரிவித்தார்.
0 Comments