NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** வரி உயர்வு, ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சியில் ஆர்ப்பாட்டம்

வரி உயர்வு, ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சியில் ஆர்ப்பாட்டம்

 வரி உயர்வு, ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திவணிகர் சங்கங்களின் பேரவை திருச்சியில் இன்று போராட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் வியாபாரிகள் பங்கேற்பு


வணிகர்களுக்கு சொத்து வரி, சேவை வரி, தொழில் வரி, தொழில் உரிம கட்டணம், உணவு பாதுகாப்பு வரி தொழிலாளர் வரி கடைகள் மீது மின் கட்டண உயர்வு பல பல வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்திக் கொண்டே செல்வதை கண்டித்தும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தியும், தொழில் உரிம கட்டணத்தை 5 மடங்கு உயர்த்தியதை கண்டித்தும், ஜிஎஸ்டி வரி மீது அபராத வரி சுமத்தப்பட்டுள்ளது கண்டித்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்டம் மற்றும் பெரம்பலூர் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை புதுக்கோட்டை மாவட்டங்கள் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது. 



ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி .பாபு தலைமை தாங்கி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் மாநில பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன் வெள்ளையன்,மாநிலப் பொருளாளர் பீர்முகமது,செயல் தலைவர்கள் வியாசை மணி,மறையூர் கருப்பையா,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான்,செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி ஆகியோர் விளக்க உரையாற்றினர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் வெற்றிவேல், திருச்சி மாவட்ட பொருளாளர் அப்துல் ஹக்கீம்,மாவட்ட இளைஞரணி தலைவர் கோபால், செயலாளர் முகமது மைதீன், பொருளாளர் அரவிந்தன்,மாநில வழிகாட்டுதல்குழு தக்காளி கந்தன், லால்குடி சிவசக்தி ராமநாதன்,மாவட்ட அமைப்பாளர் கே.கே.நகர் அனிபா,மாவட்டத் துணைத் தலைவர்கள் பஜார் மைதீன்,முகமது சபி, பழ,பூபதி,


முஸ்தபா, துரைப்பழம், முரளி, முகமது யாசின், ரங்கராஜ்,டூவீலர் சேகர். திருவரங்கம் சிவசாமி,கிருஷ்ணன்,மாநில இணைச்செயலாளர்கள் மாரி, சபி முகமது, நிரஞ்சன், உப்பிலியபுரம் கல்யாணசுந்தரம், துவாக்குடி சாகுல் ஹமீது, ரங்கநாயகி பட்டாணி சரவணன்,மாவட்ட இணை செயலாளர்கள் சுலைமான், பிரபாகரன், வையம்பட்டி அருள், அப்துல்லா, குளித்தலை சதக்கத்துல்லா மற்றும் திருச்சி மண்டலத்தைச் பல்வேறு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள்,வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments