// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மாநகராட்சி இணை ஆணையரை திரளாக சந்தித்த திருச்சி SDTU தொழிற்சங்கம்

மாநகராட்சி இணை ஆணையரை திரளாக சந்தித்த திருச்சி SDTU தொழிற்சங்கம்

SDPI கட்சியின் SDTU தொழிற்சங்கம் திருச்சி மாவட்டத்தின் சார்பாக புதிதாக அமைந்துள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பஞ்சப்பூர் சுற்று வட்டார பகுதியிலிருந்து SDTU தொழிற்சங்கத்தின் 70க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மாநகராட்சி இணை ஆணையர் பாலு அவர்களை தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா அவர்களின் தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் 

இந்த நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்கரை மீரான் துணைத் தலைவர் முகமது வாசிக் ஊடகப் பொறுப்பாளர் அல்லாபகஸ் இணைச் செயலாளர் தமிமுல் அன்சாரி மற்றும் அப்பாஸ்  ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் இந்நிகழ்வில் SDPIகட்சி திருச்சி தெற்கு மாவட்ட மேற்கு தொகுதி தலைவர் முஸ்தபா மற்றும் தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments