// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி புங்கனூர் கிராமத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

திருச்சி புங்கனூர் கிராமத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. 


இந்த நிலையில் நாடு முழுவதும் இருக்கக்கூடிய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் ,பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது

 இந்த நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூர் கிராமத்தில் உள்ள  காமராஜர், மூப்பனார் அரங்கத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தேசிய கொடி ஏற்றி குழந்தைகளுக்கு இனிப்புகளை  வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் நவீன், அருள், அழகப்பன், மோகன்தாஸ், ராமன், ஆறுமுகம், வெங்கடேசன் மற்றும் பலர் உள்ளனர்.

Post a Comment

0 Comments