இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கரூர் மாவட்டம் கடவூர் மேலப் பகுதி ஊராட்சியில் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்கு உட்பட்ட மேல பகுதி ஊராட்சியில் இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு ஊராட்சி மன்றம் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் பிச்சை மணி மூவர்ண தேசிய கொடியை கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் பின்பு காளியம்மன் கோவில் அருகில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி செயலளார் பிச்சை மணி தலைமை வகித்து தீர்மானத்தை வாசித்தார் . இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சி குறித்து பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்தில் அரசுஅலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கரூர் செய்தியாளர் - குமரவேல்
0 Comments