// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் வழக்கம் போல் செயல்படும்: தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் மலர்கண்ணன் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் வழக்கம் போல் செயல்படும்: தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் மலர்கண்ணன் அறிவிப்பு

நாளை அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என தொ.மு.ச. டாஸ்மாக் திருச்சி மாவட்ட செயலாளர் மலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சில டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வழக்கம் போல் இயங்கும் என திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. டாஸ்மாக் திருச்சி மாவட்ட செயலாளர் மலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments