// NEWS UPDATE *** "பொதுக்குழுவை கூட்ட சிவிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தல். பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்திட வேண்டாம்" தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் *** திருச்சியில் அதிமுகவில் இருந்து மேலும் நிர்வாகிகள் விலைகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்

திருச்சியில் அதிமுகவில் இருந்து மேலும் நிர்வாகிகள் விலைகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது.இதனை அடுத்து அதிமுகவில் திடீர் பிளவு ஏற்பட்டது.இந்த நிலையில் உட்கட்சி பூசலால் சிக்கி தவிக்கும் அதிமுகவிலிருந்து திருச்சியில் முக்கிய புள்ளிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர் இந்த நிலையில் மேலும் திருச்சியை சேர்ந்த முக்கிய வழக்கறிஞர் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். 

தமிழக வெற்றிகழக மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கு.ப.கிருஷ்ணன் மற்றும் பத்மநாபன் என்.எஸ் பூபதி உஸ்மான் பாபு ஆகியோர் முன்னிலையில் அதிமுக வழக்கறிஞர் அணி சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கர், வசந்தன், ராஜவேல், நவநீதகிருஷ்ணன், மணிகண்டன், ஐ.டிவி கோமதி மங்கை அதிமுக நிர்வாகிகள் அருள்மணி வடிவேல், முத்துக்குமார்




திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் 21 வது வார்டு வட்டச் செயலாளர் அமமுக B.முஸ்தபா, சிறுபான்மை பிரிவு தலைவர் கலீஃபா S.சாதாத், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் A.காதரி தவெக நிர்வாகிகள் பூபதி, உஸ்மான் முன்னிலையில் மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் தவெகவில் இணைந்தனர்


உள்பட 30க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர் 



இதனை தொடர்ந்து அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வழக்கறிஞர் விலகலால் திருச்சி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Post a Comment

0 Comments