வார்டு பங்கீடு ஏற்றுக்கொள்ள முடியாது திருச்சி காங்கிரஸ் கட்சியினர் போர் கொடி !
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள், வி.சி.க ,ம.ம.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன இந்த நிலையில் பங்கீடு குறித்து நேற்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் முதன்மை செயலாளர் அமைச்சருமான கே.என் நேரு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் 60 வார்டுகளில் உள்ள திருச்சி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது .இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி.... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டது ஆனால் இதனை ஏற்காமல் மாவட்ட தலைவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு உள்ளனர் எனவே இந்த வார்டு பங்கிட்டு ஏற்றுக்கொள்ள முடியாது இது குறித்து புகார் அளித்தும் எனவே மீண்டும் குழுவினரை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்
0 Comments