BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** பஜாஜ் நிதி நிறுவன மிரட்டலால் திருச்சி நீதிமன்றம் அருகே தீக்குளித்த நபர் மரணம்

பஜாஜ் நிதி நிறுவன மிரட்டலால் திருச்சி நீதிமன்றம் அருகே தீக்குளித்த நபர் மரணம்


திருச்சி நீதிமன்றம் அருகே தீக்குளித்த நபர் மரணம்

திருச்சி மாவட்டம். திருவரம்பூர் அடுத்துள்ள கும்பக்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் சேகர் (58). இவர் தஞ்சை ரோடு பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக பஜாஜ் நிதி நிறுவனத்தில் ரூபாய் 7 லட்சம் கடன் வாங்கியிருந்தார். தொடர்ந்து கடனை  கட்டிக் கொண்டு வந்தவர். தற்போது கடனை கட்டமுடியாமல் வீட்டை விற்று பணம் தருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் பஜாஜ் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அவர் கடைக்குச் சென்று உடனே பணத்தை கட்டச் சொல்லி மிரட்டி அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்து வந்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று மாலை திருச்சி நீதிமன்றம் அருகில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 

அவரை மீட்ட செஷன் நீதிமன்ற காவல் துறையினர் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தொடர்ந்து தனியார் நிதி நிறுவனங்கள் மிரட்டலால் பலர் பலியாகி வருவதை கண்டித்து மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் திருச்சி தில்லைநகரில் உள்ள பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்

Post a Comment

1 Comments

  1. இது போன்ற நிதி நிறுவனங்களை உடனடியாக இழுத்து மூடி அவர்களது அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்

    ReplyDelete