அனல் பறக்கும் பிரச்சாரத்தில் 12வது வார்டு சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தனது 12 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
வீடு வீடாக சென்று மக்களிடம் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு அப்பகுதி மக்கள் வழிநெடுகிலும் நின்று உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தனது 15 வருட கால அரசியல் அனுபவத்தின் மூலமும், விறுவிறுப்பான பிரச்சாரம் மூலமும் பாலமுருகன் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காவேரி நகர்,கீழ சிந்தாமணி, பழைய கரூர் சாலை, ஆகிய பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தென்னைமரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பாலமுருகன் பொதுமக்களிடம் பேசும்போது... இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, சாக்கடை வசதி, சாலை வசதி, உள்ளிட்ட வசதிகளை விரைந்து செயல்படுத்தி தருவேன். மக்கள் தேவைகளுக்காக எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். அரசு சார்ந்த பல்வேறு சலுகைகளை இப்பகுதி மக்களுக்கு வழங்கிட வாக்காளர்களாகிய நீங்கள் தென்னை மரச் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவருடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது நெகிழ்ச்சி அடையச் செய்தது.
0 Comments