// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி 3 வது வார்டு வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி 3 வது வார்டு வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 3 வது வார்டில் திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் S. செல்வி போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 3 வது வார்டுக்குட்பட்ட கீரைக்காரத் தெரு செல்வ மாரியம்மன் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து வடக்கு தேவி தெரு, கண்டி தெரு, கும்படம், சிங்கர் கோவில் தெரு, கன்னியப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



Post a Comment

0 Comments