திருச்சி 3வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வி மனு தாக்கல்
தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று திருச்சி மாநகராட்சி மலைக்கோட்டை பகுதிக்குட்பட்ட 3வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை வழங்கினார்.
3வது வார்டு செல்வி அவர்கள் மனு தாக்கல் செய்துவிட்டு வரும் பொழுது தனது ஆதரவாளர்கள் தனது உறவினர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்
0 Comments