தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 53 வது வார்டில் திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் கலைச்செல்வி ஜெகநாதன் போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து 53 வது வார்டுக்குட்பட்ட ஆணைகட்டி மைதானம்,கல்லுக்குழி, ரயில்வே காலனி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
0 Comments