// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு சமூக ஆர்வலர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம்

திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு சமூக ஆர்வலர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம்

திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு சமூக ஆர்வலர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் 

திருச்சி அரசு மருத்துவமனையில்  மகப்பேறு சிசு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் தரைத்தளம், இரண்டாம் தளம் ஆகிய பகுதிகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது...








நோயாளிகளை அழைத்து செல்லும் சக்கர நாற்காலி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. அந்த பகுதியில் நோயாளிகள் அமர்வதற்கு நாற்காலி வசதி கூட இல்லை... மகப்பேறு  சிசு தீவிர  சிகிச்சை பிரிவில் சரியான முறையில் மின் விளக்கு, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இது போன்ற அடிப்படை வசதி கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அந்த பகுதியில் எலி,கரப்பான் பூச்சி  ஆகியவை அதிகமாக உள்ளது. ஆகவே இதுபோன்ற குறைகளை நீக்கி தரமான பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கு திருச்சியை  சேர்ந்த சமூக ஆர்வலர் தெளபீக் உமர் கடிதம் எழுத்தியுள்ளார்

 

Post a Comment

0 Comments