ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் புகார் மனு
சமீபத்தில் இணைய தளங்களில் ஹெச்.ராஜாவின் பேட்டி வெளியானது. அதில் இந்திய விடுதலைக்காக இஸ்லாமியர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். இஸ்லாமியர்களை தேச விரோத செயலில் ஈடுபடுகிறார்கள் என்று அவதூறாக பேசியுள்ளார். தமிழ்நாட்டில் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து மதக்கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பேசியுள்ளார்.
மேலும் தமிழக அரசையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கலகம் ஏற்படுத்தியும் பேசியுள்ளார். இது போன்று வன்மம் மிகுந்த பேச்சுக்களைத் தொடச்சியாக பேசிவரும் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் புகார் மனு
0 Comments