// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** நாமக்கல் அருகே பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

நாமக்கல் அருகே பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு  பேருந்து நிலையம் எதிரில் உள்ள,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.., 

9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி அர்ச்சனா என்பவர், அவர் படித்து வரும் பள்ளிக்கூட  முன்றாவது  மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.





12.02.2022 அன்று மதியம்  தமிழாசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்த சமயத்தில்  மாணவி அர்ச்சனாவுக்கு  உடல்நிலை சரியில்லாமல் வாந்தி, மயக்கம்  ஏற்படுமஇ நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆசிரியரிடம்  உடல்நிலை குறித்து கூறியுள்ளார்.



கழிவறைக்கு அழைத்து செல்லுங்கள் என தமிழாசிரியர் சொல்லி இருக்கிறார்.கூடவே 2 மாணவிகளையும் அனுப்பி வைத்துள்ளார். 

திடீரென எதிர்பாராதவிதமாக மாணவி மூன்றாவது மாடியிலிருந்து  குதித்து தற்கொலை செய்து கொண்டார் 


மாணவி குதித்த அலறல் சத்தம் கேட்டு, சக ஆசியர்கள் உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

இச்சம்பவத்தில்  அதிர்ச்சியடைந்த மாணவியின்  தாயார்  மற்றும் அவரது உறவினர்கள்  அரசு பள்ளி வாசல் முன்பு அமர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழாசியர் மீது குற்றம் சுமத்தியும், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். 

காவல் துறைக்கு தகவல் தெரித்ததும்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

திருச்செங்கோடு DSP & திருச்செங்கோடு ஆய்வாளர் இருவரும் பேசி பலனலிக்காத நிலையில், வட்டாச்சியர்  & கோட்டாச்சியர் இனைந்து விசாரித்து  வருகின்றனர். 

பள்ளி மாணவி ஒருவர், பள்ளிக்கூடத்திலே தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதி மக்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


நாமக்கல் நிருபர் 

விஜயகுமார். 

Post a Comment

0 Comments