தமிழ்நாட்டில் 2003 முதல் 2013 வரை 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கக் கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தார்......
விவசாயிகளுடன் கலந்துரையாடி,ஒரு லட்சமாவது பயனாளிக்கு இலவச மின் இணைப்பு ஆணையை வழங்கி சிறப்பித்தார்கள்.
இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மன்னார்புரம் , காஜா நகர் வி.எஸ்.எம். மஹாலில் நடைபெற்ற மாண்புமிகு முதல்வர் அவர்களின் விழா நிகழ்வு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே .என் .நேரு அவர்கள் பங்கேற்றார்....
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) அபிராமி, மாவட்டப் பிரமுகர் வைரமணி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக தலைமைப் பொறியாளர் அருள்மொழி மேற்பார்வைப் பொறியாளர் வீரமுத்து மற்றும் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் வாரியப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
ஒரு இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 3115 பேர் உள்பட திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 672 விவசாயிகள் இலவச மின் இணைப்பினைப் பெற்று பயன் பெற்றுள்ளனர். மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய இந்நிகழ்வில் பங்கேற்ற, இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகள் , மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்தனர்.
0 Comments