BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** 16 ஆம் தேதி திருச்சி நத்தர்ஷா தர்கா சந்தன கூடு விழா....

16 ஆம் தேதி திருச்சி நத்தர்ஷா தர்கா சந்தன கூடு விழா....

1000 வருடங்கள் புகழ்பெற்ற திருச்சி நத்தர்ஷா தர்கா சந்தன கூடு விழா  வருடந்தோறும் பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம்.. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் பரவல் ஏற்பட்டதால் சந்தன கூடு விழா நடைபெறாமல் இருந்தது..... 

இந்த வருடம் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் திருச்சி நத்தர்ஷா தர்காவில் விழா நடைபெறுகிறது....இதில் முக்கிய விழாவான சந்தன கூடு விழா 16 ஆம் தேதி இரவு  நடைபெறுகிறது....

திருச்சி காந்தி சந்தையிலிருந்து புறப்பட்டு கமான் வளைவு வழியாக   பெரி கடைவீதி, சின்ன கடை வீதி வழியாக அதிகாலை நத்தர்ஷா தர்காவை வந்தடையும்...

இதுதொடர்பாக இன்று  தர்கா அலுவலகத்தில் வக்பு வாரியத்தால் புதிய நிர்வாகியாக பதவியேற்ற சையத்சலாவுதீன், முகமதுகவுஸ், நூர்தீன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். 

அப்போது பேசிய  சையத்சலாவுதீன்...

புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆகிய நாங்கள் மூன்று பேரும் ஒன்றிணைந்து தர்காவுக்கு தேவையான அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்துவோம். மேலும் நாங்கள் பதவியேற்று முதன்முதலாக 1025ம் ஆண்டு சந்தனக்கூடு விழா வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை ஏற்று நடத்துவது பெருமைக்குரிய விஷயமாகும். மேலும் இந்த சந்தனக்கூடு விழாவிற்கு தமிழகம், கர்நாடகா,  ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களுக்கு  உரிய முன்னேற்பாடு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 


Post a Comment

0 Comments