BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பெண்களை ஏமாற்றிய திருச்சி இளைஞர் கைது.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பெண்களை ஏமாற்றிய திருச்சி இளைஞர் கைது.

சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த 19 வயது கல்லூரிமாணவி ஒருவர், திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப் பிரிவு போலீஸ் நிலையத்தில் தனது பெற்றோருடன் வந்து நேற்று புகார் மனு அளித்தார். அந்த புகாரில், தன்னிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த விஷ்வம் (வயது 29) என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி தன்னுடன் பழகி வந்ததாகவும், அதன்பிறகு தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்துக் வைத்து கொண்டு, அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டிதன்னிடம் இருந்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், மடிக்கணினி, ஐ-போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும் கூறி இருந்தார்.

புகாரின்பேரில் இன்ஸ் பெக்டர் சியாமளாதேவி நேற்று வழக்குப்பதிவு செய்து, தில்லை நகரில் வீட்டில் இருந்த  விஷ்வாவை மடக்கி பிடித்தனர். அவரது வீட்டில் இருந்து மடிக்கணினிகள், செல்போன் கள் மற்றும் நகைகளை பறிமு தல் செய்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்த னர். விசாரணையில் அவர், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட் ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் பழகி அவர்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.



உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இவ்வாறு அவர் வீசிய வலையில் சிக்கிய பெண்களிடம் உல்லாசமாக இருந்து, அதை வீடியோவாகவும். பதிவு செய்து வைத்துள்ளார். அந்தவீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடு வேன் என்றும், மாணவிகளின் பெற்றோரிடம் காண்பித்து விடுவேன் என்றும் அவ்வப்போது மிரட்டி அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளார். இதுவரை சென்னையை சேர்ந்த மாணவி உள்பட ஏராளமான பெண்களிடம் பலலட்சக்கணக்கான ரூபாய் பறித்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும், அவரது மடிக்கணி னியில் 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களும் இருந் தன.கிட்டத்தட்ட 4 ஆண்டுக ளாக அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி நகை, பணம் பறிக்கும் மோச டியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதைய டுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 மடிக்கணினி, 2செல்போன் கள். நகைகள் உள்ளிட்டவை களை பறிமுதல் செய்தனர்.

Post a Comment

0 Comments