BREAKING NEWS *** சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு *** மருத்துவர்களுக்கு பாராட்டு விழா...! விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு

மருத்துவர்களுக்கு பாராட்டு விழா...! விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு

 மருத்துவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது....

மும்பையைச் சேர்ந்த ராஜஸ்தான் அவ்ஷாதாலயா பிரைவேட் லிமிடெட் சார்பில் மருத்துவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.....


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்  ஓட்டலில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார்....

இந்த நிகழ்ச்சியில் ஆயுர்வேதா, சித்தா, அக்குப்பஞ்சர் மருத்துவர்கள் டாக்டர் தமிழரசி, டாக்டர்கள் ஜான் ராஜ்குமார், முனவர், டேவிட் பரமானந்தம், கணேசன், அருள், ஆனந்த், முகமது கனி, யாசிர் அராபத், ஹரி ராமர்.

அண்ணாதுரை, குமரன், அப்துல் ஜலீல், சையது உசேன், காளிமுத்து, தேசியம் பிள்ளை, வெங்கடேசன், சுந்தரமகாலிங்கம், தமிழ்ச்செல்வி, ஷீலா, ஜெயந்தி, சிவக்குமார், ரவி, கஜலட்சுமி, சம்பத் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும் ரூ.3,000 மதிப்புள்ள ஆயுர்வேத மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அனைவருக்கும் பயிற்சி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்பட்டது.



மேலும் ரூ. 3,000 மதிப்புள்ள ஸ்டெத்தாஸ்கோப் அனைத்து மருத்துவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராஜஸ்தான் அவ்ஷாதாலயா பிரைவேட் லிமிடெட் நிர்வாகிகள் சாய்தேவ், பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments