BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சீரங்கராயபுரம் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 100 வருடத்திற்க்கு மேலாக 50 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் அந்த பகுதியில் இடம் எனக்கு தான் செந்தமென அப்பொதுமக்களை திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் அடி ஆட்கள் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று ராஜா என்பவரின் வீடு பழமையாகிவிட்டதால் விழும் அபாயத்தில் இருந்த நிலையில் வீட்டை இடித்த போது அங்கு வந்த நரேஷ் குமார் என் இடத்தில் என்ன செய்கிறிர்கள் என மிரட்டியுள்ளார் உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்த பொது மக்களை அப்புறப்படுத்தி வாகனங்களை சரி செய்தனர்.


இந்த சாலை மறியலால் திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments