NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் இண்டர்நேஷனல் பிசினஸ் பார்க் பூமி பூஜை

திருச்சியில் இண்டர்நேஷனல் பிசினஸ் பார்க் பூமி பூஜை

 திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய்ஸ் சிட்டி வளாகத்தில் மொராய்ஸ் இன்டர்நேஷனல் பிசினஸ் பார்க் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மொராய்ஸ் சிட்டி உரிமையாளர் லெரோன் மொராய்ஸ் தலைமை வகித்தார்.ப்ரியா லெரோன் மொராய்ஸ் வரவேற்புரை ஆற்றினார்.


இதில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி கஸ்டம்ஸ் ஆணையர் அனில், திருச்சி ஜிஎஸ்டி இணை ஆணையர்கள் ரத்தினகுமார், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, ஸ்ரீ விக்னேஷ் குரூப் சேர்மன் கோபிநாதன் ஆக்சினா குரூப் ஆப் கம்பெனிஸ் சேர்மன் ஜெயகர்ணா, க்ரிடாய் தலைவர் ரவி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் காமேஸ்வரராவ், பி.ஏ.ஐ. தலைவர் நெப்போலியன், ஹெச்டிஎஃப்சி லிமிடெட் மதுரை மண்டல தலைவர் நவநீத் சர்மா, சியேட் தலைவர் கார்த்திக், பிளாசம் ஹோட்டல் உரிமையாளர் இளமுருகு, எஸ் டிவி உரிமையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த பூமி பூஜையில் தொழில் அதிபர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் பூமி பூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சி மொராய்ஸ் சிட்டி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments