NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** பெண் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

பெண் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

 திருச்சி கல்பாளையத்தில் வசித்து வருபவர் வி.ஏ.ஓ கலைவாணி ஸ்ரீரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். 



திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவர் கடையில் வாங்கிய புளி  சரியில்லை என கூறி  நேற்றிரவு  கடைக்கார் இப்ராஹிமிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.  வி.ஏ.ஓ கலைவாணி அங்கு கடை வைத்திருந்த உறவினர்களை அழைத்து வந்து கேட்ட பொழுது இரண்டு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியாக மாறியது.


இந்த சிசிடிவி காட்சிகள் இன்று வெளியான நிலையில் விஏஓ கலைவாணி ஆட்களை வைத்து கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாகவும் கடையில் வைத்திருந்த பணத்தை கலைவாணியின் ஆதரவாளர்கள்  சூறையாடி சென்றதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து விஏஓ கலைவாணியை பதவி நீக்கம் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்...




என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு அளித்தனர்.

Post a Comment

0 Comments