BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** பெண் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

பெண் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

 திருச்சி கல்பாளையத்தில் வசித்து வருபவர் வி.ஏ.ஓ கலைவாணி ஸ்ரீரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். 



திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவர் கடையில் வாங்கிய புளி  சரியில்லை என கூறி  நேற்றிரவு  கடைக்கார் இப்ராஹிமிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.  வி.ஏ.ஓ கலைவாணி அங்கு கடை வைத்திருந்த உறவினர்களை அழைத்து வந்து கேட்ட பொழுது இரண்டு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியாக மாறியது.


இந்த சிசிடிவி காட்சிகள் இன்று வெளியான நிலையில் விஏஓ கலைவாணி ஆட்களை வைத்து கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாகவும் கடையில் வைத்திருந்த பணத்தை கலைவாணியின் ஆதரவாளர்கள்  சூறையாடி சென்றதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து விஏஓ கலைவாணியை பதவி நீக்கம் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்...




என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு அளித்தனர்.

Post a Comment

0 Comments