// NEWS UPDATE *** அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தம்பிதுரை மனு தாக்கல் செய்தார் *** "அச்சம் தவிர்" குறும்பட குழுவினருக்கு தேசிய விருது நீதிபதிகள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

"அச்சம் தவிர்" குறும்பட குழுவினருக்கு தேசிய விருது நீதிபதிகள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

 இந்திய தலைநகர் டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் பட குழுவினர்   சென்னையில் உள்ள  தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்  நீதியரசர் S. பாஸ்கரன் அவர்களை (தலைவர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்)  அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்..




இந்த நிகழ்வில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் திரு. விஜயகார்த்திகேயன் IAS அவர்களும்  தேசிய விருது பெற்ற அச்சம் தவிர்  படக்குழுவை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்..



இதனை தொடர்ந்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர்  மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்



மேலும் தமிழ்நாடு அரசின் சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர் மாண்புமிகு நீதிபதி முகமது ஜியாவுதீன் அவர்களையும் படக்குழுவினர் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்




   




இந்த நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் தலைவர் ஆர்.கே.குமார் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச்.சுப்பிரமணியம் மாநில மகளிர் பிரிவு தலைவர் லதா அர்ஜுனன்  படத்தின் இணை இயக்குனரும்    நடிகரும் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் படத்தின் இயக்குனரும் திருப்பூர் மாவட்ட செயலாளருமான குமார் தங்கவேல் ஒளிப்பதிவாளர் யாசின் மற்றும் நஸீர் உள்ளிட்டோர் சந்தித்தனர்

Post a Comment

0 Comments