// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி

திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி

திருச்சி  அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தான விழிப்புணர்வு  குறித்த மனித சங்கிலி -  மாநகர காவல் துணை ஆணையர்  தொடங்கி வைத்தார்...


திருச்சியில் தேசிய கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  திருச்சி தென்னூர் சாஸ்திரி ரோட்டில் அமைந்துள்ள  டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 





இந்த பேரணியை திருச்சி மாநகர் காவல் வடக்கு துணை ஆணையர் அன்பு தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு கண் தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்..

Post a Comment

0 Comments