BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை

 திருச்சி மாவட்டம்‌ மண்ணச்சநல்லூர் வட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.414 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளபு திய கதவணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 


இதன்மூலம் 12 இலட்சத்து 58ஆயிரத்து 460 ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறும்.மேலும் குடிநீர் கிணறுகள் பயன் அடைவதுடன் காவிரி மற்றும் கொள்ளிடம்ஆற்றில் வெள்ள பாதிப்புகளை தடுக்கவும் இந்த அணை பயனளிக்கும்.இந்த நிகழ்ச்சியில் PWD Cheif Engineer (CE),Executive Engineer (EE), SDO, Junior Engineer, (JE), Assistant Engineer (AE)மற்றும் துறைஅலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 






காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அனைவரின் சார்பாக விவசாய சங்க‌ தலைவர் திருச்சி அய்யாகண்ணு மற்றும் காவிரி பாசன விவசாயிகள் நல சங்கம்விவசாயி குளித்தலை கவண்டம்பட்டி சுப்ரமணியம் ஆகியோர் கலந்துக் கொண்டு தமிழக முதல்வர் அவர்களுக்குநன்றி தெரிவித்தனர்.

நிருபர் கரூர் குமரவேல் 

Post a Comment

0 Comments