தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத திருச்சி மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு SDPI கட்சியின் கல்வியாளர் அணியினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்..திருச்சியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடாது பெய்து வரும் அடை மழை என்று தெரிந்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததை SDPI கட்சி - கல்வியாளர் அணி திருச்சி மாவட்டம் சார்பில் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர் அதில் கூறுகையில்...
மேலும் கன மழையிலும் பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் மருங்காபுரி வளநாடு கைகாட்டி அருகே அரசு பள்ளி மாணவருக்கு விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்
மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவருக்கான அனைத்து வகையான மருத்துவ உதவியும் செய்ய வேண்டும் என்று SDPI கட்சி, கல்வியாளர் அணி சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தனர்..
இனி வரும் காலங்களில் மழையின் தன்மையை பொறுத்து மாவட்ட ஆட்சியர் பள்ளி குழந்தைகள் மீது அக்கறை கொண்டு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
0 Comments