// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** திருச்சியில் அரசியல் பயிலரங்கம் நடத்திட மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு ...!

திருச்சியில் அரசியல் பயிலரங்கம் நடத்திட மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு ...!

மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் (எ)  பாபு  தலைமையில், மாவட்ட பொருளாளர் ஜமீர் பாஷா, அவைத் தலைவர் ஷேக் தாவூத், மாவட்ட துணைச் செயலாளர்கள் தர்வேஷ், ஷேக் அப்துல்லா, யாசர் ஷெரிப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் தர்வேஷ் அவர்கள் நிர்வாகிகளை வரவேற்று உரையாற்றினார்.கூட்டத்தின் நோக்கத்தை மாவட்ட செயலாளர் பாபு  விளக்கினார்.,


இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி M.முஹமது ஷரிப் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் கருத்துரையாற்றினார். 


முன்னதாக சுதந்திர தின நிகழ்வுகளை சிறப்பாக ஒருங்கிணைத்த பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.


அதன்பின் நிர்வாக சீரமைப்பு மற்றும் செயல் திட்டத்தின் அடிப்படை சாரம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 



நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-

1. அதிவிரைவில் கண் சிகிச்சை முகாம் நடத்துவது.

2. பகுதி பொறுப்பாளர்களை நியமித்து பணிகளை முடுக்கி விடுவது.


3. மாவட்ட நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் நடத்துவது.போன்ற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments