திருச்சி மாநகராட்சி 12வது வார்டு சுயச்சை வேட்பாளர் பாலமுருகன் வாக்காளர்கள் மனதில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்
அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து தனது தொகுதிக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் இன்று தனது 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக நடந்து சென்று ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாக சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளை அவர்களிடம் எடுத்துரைத்து தென்னை மரம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவருடன் பிரச்சாரத்திலும் தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் கூறுகையில்... பாலமுருகனுக்கு வாக்களித்தால் எங்கள் பகுதிக்கு நலத்திட்ட உதவிகள் எளிதில் கிடைக்கும். வாக்காளர்கள் மத்தியில் அவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதோடு பதவியில் இல்லாத காலகட்டத்திலேயே பாலமுருகன் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். கொரோனா பேரிடர், தீ விபத்து, மழை, வெள்ள பாதிப்பு போன்ற காலகட்டங்களில் மக்களுக்கு உதவி செய்துள்ளார். அதனால் இந்த வார்டில் பாலமுருகன் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தார்.
0 Comments