தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 16வது வார்டில் திமுக சார்பில் A.கவிதா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்று 16வது வார்டுக்குட்பட்ட பகுதியான பெல் நகர் A,B,C செக்டார், கலைஞர் தெரு, அன்னை இந்திரா நகர், (EX சர்வீஸ் மேன் காலனி) ஆகிய பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர் வாக்கு சேகரிப்பின் போது அண்ணாமலை, சத்யா, ஆரோக்கியதாஸ், ஜெயபால், ரமேஷ், நிஷாந்த் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments