தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 25 வது வார்டில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று இரவு 25 வது வார்டுக்குட்பட்டஉய்யகொண்டான் திருமலை, ரெங்கா நகர்,கீதா நகர், அம்மையப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
0 Comments