திருச்சி மாநகராட்சி 25 வது வார்டில் திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் போட்டியிடுகிறார்
இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த நாகராஜ் தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை 25 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சிவன் தெரு, கீழ தெரு,நடு தெரு, தெற்கு தெரு, பூக்கொல்லை தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்
0 Comments