திருச்சி 39 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் பிரச்சாரம்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் தற்போது விருவிருப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கை சின்னத்தில் வேட்பாளர் ரெக்ஸ் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ரெக்ஸ். இந்நிலையில் நேற்று 39 வது வார்டுக்குட்பட்ட காட்டூர் கைலாஷ் நகர் அருகே தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளர் ரெக்ஸை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments